சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

2 months ago 8

வேளச்சேரி: பெரும்பாக்கம், எழில் நகர், பி-பிளாக்கை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (62). காவளாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 21ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் நைசாக பேசி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்து தப்பித்து சென்று, தனது தாயிடம் இதுபற்றி கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணனை போக்சோ வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article