சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல்.. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!!

1 week ago 5

டெல்லி: குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. “எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் உடனடியாக ஒப்புதல் வழங்கியது.

ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள் பின்வருமாறு;

* 2020ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா.

* 2020ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை திருத்தச் சட்ட மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா.

* 2022ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா.

* 2023ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

* 2023ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா. ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

The post சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல்.. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article