சிபிஎம் மாநாட்டு பணிகளை பிரகாஷ் காரத் ஆய்வு

4 months ago 13

 

மதுரை, பிப். 16: மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்.2 முதல் ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இதன்படி மாநாடு நடக்கும் தமுக்கம் மைதானத்தை கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் நேற்று பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர், பின்னர் பிரகாஷ் காரத் கூறும்போது, ‘‘மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 1972ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது 24வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டேன்’’ என்றார்.

The post சிபிஎம் மாநாட்டு பணிகளை பிரகாஷ் காரத் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article