சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

2 hours ago 1

சென்னை: சித்ரா பெளர்ணமியை ஒட்டி வரும் 11, 12ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

11/05/2025 இரவு 08.48 மணி முதல் 12/05/2025 இரவு 10.44 மணி வரை (திங்கள்கிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 11/05/2025 மற்றும் 12/05/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 11/05/2025 அன்று 1,156 பேருந்துகளும் மற்றும் 12/05/2025 அன்று 966 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து 11/05/2025 அன்று 150 பேருந்துகளும் 12/05/2025 அன்று 150 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 11/05/2025 அன்று 1,940 பேருந்துகளும் 12/05/2025 அன்று 1,530 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 11/05/2025 மற்றும் 12/05/2025 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

The post சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article