சித்தூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

2 weeks ago 5

ஆந்திரா: சித்தூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து சித்தூர் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரியும் பேருந்தும் மோதிய விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் திருச்சி திரும்பி கொண்டிருந்தனர். சித்தூர் – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சித்தூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article