சி.டி.ஸ்கேன் கருவி வாங்க வந்தவரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.20 லட்சம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

4 months ago 13

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனை அகமது. இவர் சிடி ஸ்கேன் கருவி வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தன்னிடம் பணியாற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து, சென்னைக்கு அனுப்பியுள்ளார். அதன்படி முகமது கவுஸ் பணத்துடன் நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி நோக்கி வாலாஜா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, அவரை வழிமறித்த 2 பேர், நாங்கள் போலீஸ் என்று கூறி, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சம் இருந்தது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு முகமது கவுஸ், சிடி ஸ்கேன் கருவி வாங்க வந்துள்ளேன், என்று கூறியுள்ளார். உடனே இருவரும் பணத்திற்கு ஆவணங்கள் இல்லாததால், இது ஹவாலா பணமா என கேட்டு மிரட்டியுள்ளனர்.

பிறகு பணத்தை காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பெற்று கொள்ளுங்கள் என கூறி, பணத்தை பையுடன் பெற்றுச் சென்றுவிட்டனர். முகமது கவுஸ், உடனே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சென்று விசாரித்தபோது, போலீசார் யாரும் பணத்தை பெறவில்லை, என்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவம் நடந்த வாலாஜா சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சி.டி.ஸ்கேன் கருவி வாங்க வந்தவரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.20 லட்சம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article