காரிமங்கலம், பிப்.5: காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ராமசாமி கோயில் வரை, போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அகரம் பிரிவு ரோடு முதல் கடைவீதி வரை மழைநீர் வடிகால் அமைத்து சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 மாதங்களுக்கு மேல் நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டு அதில் கருப்பு வர்ணம் பூசுதல் மற்றும் ரிப்ளக்டிங் ஸ்டிக்கர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post சாலை விரிவாக்க பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.