சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்

3 hours ago 2

சென்னை,

சித்திரை மாதத்தின் விஷேச தினமான இன்று(புதன்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 300 டோக்கன் வழங்கப்படும். அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article