திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கருப்பட்டி விற்பனைக்கு அனுமதி

1 month ago 14

திண்டுக்கல்,

நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ரெயில் பயணிகளுக்கு, அந்தந்த ஊரில் தயாராகும் முக்கிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள், காபித்தூள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதற்கிடையே எரியோடு, கோவிலூர் சுற்றுவட்டார கிராமங்களில் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இதனை வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், கடைகளில் கேட்டு வாங்கி செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் கருப்பட்டி விற்கப்படுமா? என்பது ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்துக்கு, அதிகாரிகள் பரிந்துரை அனுப்பினர். இதையடுத்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கருப்பட்டி விற்பனை செய்வதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி விரைவில் கருப்பட்டி விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article