சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்...? தலைமை பயிற்சியாளர் பதில்

1 week ago 3

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விக்கெட் கீப்பர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இருவரில் யார் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார் என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? என்பது குறித்த கேள்விக்கு தெளிவான பதிலளித்த தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறுகையில்,

"தற்போதைய ஒருநாள் இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராகுல்தான். ஆனாலும் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். தற்போது கே.எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் வைக்க முடியாது" என்று கூறினார்.

Read Entire Article