சாம்சங் தொழிலாளர்கள் மீதான பணி நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததாக பரவிய தகவலால் காஞ்சிபுரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் சிஐடியு தொழிற்சங்கத்தை தொழிலாளர் நலத்துறை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தப் போராட்த்தையொட்டி சாம்சங் தொழில் நிறுவன தொழிலாளர்களின் சங்கத்துக்கு தொழிலாளர் நலத்துறை அங்கீகாரம் அளித்து உத்தரவிட்டது.