சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்தினருக்கு அரசு எதையும் செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த் சாடல்

2 weeks ago 3

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருமயம் கடைவீதியில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: ஜகபர் அலி கொலையைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகுதான் தமிழக அரசு, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

Read Entire Article