சங்கரதாஸ் சுவாமிகள் 102-வது நினைவு தினம்: அமைச்சர், நாடக கலைஞர்கள் மலரஞ்சலி

4 months ago 14

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் கருவடிக்குப்பம் மயானத்தில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 102-வது நினைவு தினம் இன்று நடந்தது. அவரது நினைவிடத்தில் அமைச்சர், நாடக கலைஞர்கள், கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர். ஆனால், வழக்கமாக பங்கேற்கும் திரைத்துறையினர் யாரும் பங்கேற்கவில்லை.

நாடகத் தந்தை என போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது நினைவு தினம் இன்று அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. கருவடிகுப்பம் சுடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அமைச்சர் திருமுருகன் மலரஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து சிலைக்கும் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள், கண்காணிப்பாளர் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read Entire Article