கோவை துடியலூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் சடலமாக மீட்பு..!!

1 week ago 3

கோவை: துடியலூர் அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த ஜெயராஜ், மகேஷ் ஆகியோர் துடியலூர் பகுதியில் பேக்கரி, ஸ்வீட் கடை நடத்தி வருகின்றனர். இருவரும் கடைக்கு வராத நிலையில் கடை ஊழியர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து இருவரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை துடியலூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article