கோவில்பட்டியில் வீடு புகுந்து கத்திமுனையில் இளம்பெண் பலாத்காரம் வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்: மற்றொருவர் கால் முறிந்தது

4 hours ago 1

கோவில்பட்டி: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் எஸ்ஐ மற்றும் போலீஸ்காரரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் போதையில் அத்துமீறி புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் புகாரின்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக வீரவாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் (28), மாரியப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடிவந்தனர். அவர்கள் வீரவாஞ்சிநகர் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து போலீசார் நேற்று காலை அங்கு சென்றனர்.போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற மாரியப்பன் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியப்பனை சுற்றி வளைத்த போலீசார், அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான மாரிசெல்வத்தை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பகுதியில் மாரிசெல்வம் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. சப்.இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீஸ்காரர் பொன்ராம் ஆகியோர் அவரை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது இருவரையும் அரிவாளால் தாக்கி கொல்ல முயன்றார். இதனால் தற்காத்துக்கொள்ள எஸ்ஐ ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில் மாரி செல்வத்தின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை பிடித்த போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து தகவறிந்த தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாருக்கு ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.

The post கோவில்பட்டியில் வீடு புகுந்து கத்திமுனையில் இளம்பெண் பலாத்காரம் வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்: மற்றொருவர் கால் முறிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article