
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் மேட்டுப்பாளையத்தில் பிரான்சைஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்குதான் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் சென்று அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு லாரன்ஸ்சின் மனைவி கிலாடிஸ் மற்றும் அவரது தங்கை மகள் அமினா (வயது 5) ஆகிய இருவரும் சென்றதால் தண்ணீரில் தத்தளித்தனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்வார் திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.