
புதுடெல்லி,
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முதல் தரிசனத்திற்காக அதிகாலையில் பல பக்தர்கள் வந்திருந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்ததால் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.