கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை 3 மடங்கு உயர்வு: முகூர்த்தநாள் வியாபாரம் களைகட்டியது

2 months ago 10


அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாளை முதல் முகூர்த்த நாள் என்பதால் இன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,800 க்கும் ஐஸ் மல்லி 800 லிருந்து 1500 க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி 600 லிருந்து 1,300 க்கும் கனகாம்பரம் 1000 லிருந்து 1, 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நஞ்சாங்கோட்டை பூ பாக்கெட் 2,000க்கும் அரளி பூ 150 லிருந்து 300 க்கும் சாமந்தி 130 க்கும் சம்பங்கி 60லிருந்து 300க்கும் பன்னீர் ரோஸ் 120 க்கும் சாக்லேட் ரோஸ், 140 லிருந்து 200 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை 3 மடங்கு உயர்வு: முகூர்த்தநாள் வியாபாரம் களைகட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article