சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: பிப்.7 (வெள்ளி), பிப்.8 (சனி), பிப்.9 (ஞாயிறு) வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு பிப்.7ம் தேதி அன்று 380 பேருந்துகளும், 8ம் தேதி 530 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 60 பேருந்துகளும் நாளை மறுநாள் 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து நாளை 20 பேருந்துகளும், நாளை மறுநாள் 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
The post தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் appeared first on Dinakaran.