கோடைகாலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் மோர், எலும்பிச்சை சாறு

3 days ago 2

 

கரூர், மார்ச். 28: கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து போலீசார் உட்பட அனைவருக்கும் மோர், எலுமிச்சை சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு, கடும் வெயலிலும் போக்குவரத்து துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் பனிச்சுமையை குறைக்கும் வகையிலும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், கருர் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு காற்றோட்டம் உள்ள தொப்பி, கருப்பு கண்ணாடி, மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேரூந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு, போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி, மோர், பழச்சாறு போன்றவற்றை வழங்கினார். இந்த நிகழ்வில், டிஎஸ்பி செல்வராஜ், போக்குவரத்து ஆய்வாளர் சாஹிராபானு, நந்தகோபால் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post கோடைகாலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் மோர், எலும்பிச்சை சாறு appeared first on Dinakaran.

Read Entire Article