
சென்னை,
சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு-திருவனந்தபுரம்(வண்டி எண்.06555) வாராந்திர சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமைகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 30-ந்தேதி வரை பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரெயில் சனிக்கிழமைகளில் திருப்பூருக்கு அதி காலை 4.03 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும்.
திருவனந்தபுரம்-பெங்களூரு(06556) வாராந்திர சிறப்பு ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.53 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.