கோடை காலம் நெருங்கும் நிலையில் அனைத்து பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் ஆய்வு செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

2 hours ago 2

சென்னை: கோடை காலம் நெருங்கும் நிலையில் அனைத்து பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தி பகுதியில் இயங்கிவரும் சத்யபிரபு பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் 7 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கிடங்குகளிலும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யப்படவேண்டும். பட்டாசு தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் தாயுள்ளம் கொண்ட நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய இழப்பீடுகள் அறிவிப்பார்கள் என்றும் நம்புகிறேன். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post கோடை காலம் நெருங்கும் நிலையில் அனைத்து பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் ஆய்வு செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article