கரூர்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தைச் சேர்ந்தவர் பிரபு(40). கற்றாழையை கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா, மகள் தியா(10), மகன் ரிதன்(3).
இந்நிலையில், பிரபு, மனைவி மதுமிதா, குழந்தைகள், மாமனார் முத்து கிருஷ்ணன்(61) ஆகியோருடன் ஏப். 17-ம் தேதி கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு படா பஜார் ரபிந்தரசரணி பகுதியில் 5 தளங்கள் கொண்ட ஹோட்டலில் குடும்பத்தினர் அனைவரும் தங்கியிருந்தனர்.