கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

1 month ago 5

 

சிவகங்கை, பிப்.10: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தொழிலாளர் நலத்துறை சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஆஷாஅஜித் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து, நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினம் appeared first on Dinakaran.

Read Entire Article