கொடைக்கானல், நவ. 23: கொடைக்கானலுக்கு மதுரை கோட்டத்தில் இருந்து 5 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பல ஆண்டு காலமாக இயக்கப்பட்ட நிலையில் மிகவும் பழுதாகி அவ்வப்போது பாதி வழியிலேயே நின்று வந்தது. எனவே கொடைக்கானுக்கு புதிய அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த பழைய அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கொடைக்கானலுக்கு புதிய அரசு பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.