கைத்தறி நெசவாளர்களின் அடிப்படை கூலி 10 சதவீதம் உயர்வு

2 days ago 3

தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கான அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி தலா 10 சதவீதம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் நிறைவாக அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் நெசவாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாயிலாக கைத்தறி தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் வளர்ச்சிக்காக பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.

Read Entire Article