திருநெல்வேலி/ நாகர்கோவில்: கேரள மாநிலத்தில் இருந்து அபாயகரமான மருத்துவக் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து நெல்லை அருகேயுள்ள நீர்நிலைகளில் கொட்டியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்று நோய் மையத்திலிருந்து வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக் கழிவுகள், நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கொட்டப்பட்டுள்ளன.