கேரளா: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி

4 hours ago 1

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனிக்கன்குட்டி பகுதியை சேர்ந்தவர் சுபா (வயது 44). இவருக்கு அபினந்தன் (வயது 7), அபினவ் (வயது 5) என 2 மகன்கள் இருந்தனர். சுபாவின் கணவர் அனீஷ் கோரானா பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, சுபா மகன்கள் மற்றும் தனது தாயார் பொன்னம்மாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், சுபாவின் வீட்டில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓலையால் கட்டப்பட்டிருந்த வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. இந்த தீ வீடு முழுவதும் பரவியது. இந்த சம்பவத்தில் சுபா மகன்கள் அபினவ், அபினந்தன் தாயார் பொன்னம்மா என குடும்பத்தினர் 4 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் , பற்றி எரிந்த தீயை அணைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article