குற்றவியல் அரசு வழக்கறிஞர் நியமனம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

4 months ago 18

மதுரை: குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்பியதற்காக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, “பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிகிறது. இவ்வாறு இருந்தால் குற்றவியல் நீதிபரிபாலனம் முடங்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களில் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது, இந்த காலியிடங்களை நிரப்ப அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

Read Entire Article