குற்ற செயல்களில் ஈடுபட்ட 4 ரவுடிகள் கைது

13 hours ago 3

 

பெரம்பூர்: வியாசர்பாடி கல்லு கடை சந்திப்பு அருகே குடிபோதையில் 4 பேர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாகவும் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த 4 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், வியாசர்பாடி பி.வி.காலனி 31வது தெருவை சேர்ந்த பிரஜன் (19), சிவக்குமார் (19), கார்த்திக் (எ) கருப்பு கார்த்திக் (24), ஆண்ட்ரூஸ் (25) என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்தவர் தீபன் (எ) சூளை (34).

இவர் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் சில குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்கில் இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி, போலீசார் தீபனை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post குற்ற செயல்களில் ஈடுபட்ட 4 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article