சென்னை: பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம் என உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151வது இடத்துக்கு சரிந்துள்ளது ஏன்?. கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை பார்த்து அஞ்சுகிறது ஒன்றிய பாஜக அரசு. பத்திரிகை அலுவலகங்களில் சோதனை, செய்தியாளர்களை சிறையில் அடைப்பது என பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பாஜக அரசின் ஊழல், மனித உரிமை மீறல்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதால் நிருபர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.
The post பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம் – முதலமைச்சர் appeared first on Dinakaran.