சென்னை: குறுகிய, நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வாகனம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சலக வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவை தற்போது 120 வாகனங்களுடன் செயல்படுகிறது. இதனால், பகுதி முழுவதும் தபால்கள், பார்சல்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன.