சேலம், பிப்.5: சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவாநகர் அருகே மைன்ஸ் குட்டை உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 30வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், உடனடியாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், அவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு குட்டையில் உடலை வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடல் அழுகியுள்ளதால் அவர் இறந்து 3 நாட்களுக்கும் மேல் இருக்கும். மேலும் அந்த பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளனரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குட்டையில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.