தஞ்சாவூர், ஜன.25: குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சை ஆயுதபடை மைதானத்தில் பள்ளி மாணவ மாணவியர்களின் நடன ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாட்டின் 76வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, அரசுத் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரியும் காவலர்களுக்கு சான்றிதழ், புத்தகம், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள், நற்சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார். இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி, தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பள்ளி மாணவ மாணவிகளின் நடன ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
The post குடியரசு தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவிகள் நடன ஒத்திகை appeared first on Dinakaran.