தர்மபுரி, பிப்.7: கடத்தூர் மணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(52), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. நேற்று முன்தினம், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தங்கராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மணியம்பாடி பகுதியில் உள்ள ஓடையில் அவர் சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற கடத்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மதுபோதையில் இருந்த தங்கராஜ், தரைப்பாலத்தில் படுத்திருந்த போது தவறி ஓடையில் விழுந்து உயிரிழந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடிபோதையில் ஓடையில் தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.