குஜிலியம்பாறையில் ஆடு திருடிய 2 பேர் கைது

6 months ago 27

 

குஜிலியம்பாறை, அக். 17: குஜிலியம்பாறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (56). இவர் தான் வளர்த்து வரும் ஆட்டை வீட்டின் முன்பு கட்டி வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீடு திரும்பி வந்து பார்த்து போது ஆட்டை காணவில்லை. இதுகுறித்து செல்வம் அக்கம்பக்கத்தினரிடம் கேட்டுள்ளார். அப்போது குஜிலியம்பாறை கிழக்கு தெருவை சேர்ந்த பாலாஜி (எ) பாலகிருஷ்ணன் (23), மணப்பாறை சாலையில் குடியிருக்கும் மாணிக்கமுத்து (39) ஆகியோர் ஆட்டை பிடித்து சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து செல்வம் குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலாஜி, மாணிக்கமுத்துவை கைது செய்தனர்.

The post குஜிலியம்பாறையில் ஆடு திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article