கிராம மக்கள் போராட்டம்

3 weeks ago 5

 

சிவகங்கை, ஜன. 11: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வாணியங்குடி ஊராட்சி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிரங்கால் ஊராட்சி மற்றும் வாணியங்குடி ஊராட்சியில் சில பகுதிகள் சிவகங்கை நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கலந்து கொண்டனர். நகராட்சியுடன் இணைப்பதால் வீட்டுவரி, நில வரி, குடிநீர் வரி உயரும், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்பட மாட்டாது. எனவே நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

The post கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article