
சென்னை,
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
தமிழகத்தில் காவல்துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் முழுமையாக கையாள முடியவில்லை என்கிற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொலை சம்பவங்கள், போதைப்பொருள் சகஜமாக புழக்கத்தில் உள்ளது.
மேலும் ஓ பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.