
சென்னை,
காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;
"தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.
காவலர் சேர்மநல நிதி 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.