கால் சென்டரில் பணிபுரிந்த பெண் ஊழியர் தற்கொலை

1 week ago 3


மாதவரம்: கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த இந்திர தீபன் – மஞ்சுளா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் ரஞ்சிதா (26), பி.காம் படித்து முடித்துவிட்டு தனியார் கால் சென்டரில் வேலை செய்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், இவர் வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சிதா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கால் சென்டரில் பணிபுரிந்த பெண் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article