டெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் நிர்வாக செலவினங்கள் உயர்வு எதிரொலியாக அந்நிறுவன கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி வரும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து தங்கள் கார்களின் விலையை மடல்களுக்கு தகுந்தபடி ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.32,500 வரை அதிகரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் அறிக்கையின் படி, செலிரியோ மாடல் காரின் விலையில் ரூ.32,500 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இனோவாவுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இன்விக்டோ கார்களுக்கு ரூ.30,000யும், கிராண்ட் விதாராவுக்கு ரூ.25,000யும், ப்ரீஸா கார்களுக்கு ரூ.20,000யும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆல்டோ கே-10, எர்டிகா மாடல் கார்களுக்கு முறையே ரூ.19,500 மற்றும் ரூ.15,000 வரை விலை உயர்கிறது. பிப்ரவரி 1ம் தேதி முதல் வேகன்-ஆர் கார்களுக்கு ரூ.13,000 வரையிலும், ஈக்கோ கார்களுக்கு ரூ.12,000யும், டிஸையர் கார்களுக்கு ரூ.10,500 வரையும் கூடுதலாக செலுத்த வேண்டும். ஸ்விஃப்ட், எஸ்-பிரஸோ ஆகிய மாடல் கார்களுக்கு தலா ரூ.5,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மாருதி சியாஸ் மற்றும் ஜிம்னி ஆகிய கார்களின் விலையில் ரூ.1,500 வரை விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது.
The post கார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுசூகி நிறுவனம்: வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் விலையேற்றம் அமலாகிறது appeared first on Dinakaran.