காரில் கடத்திய ரூ42 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

2 hours ago 3


பாலக்காடு: கோவை அடுத்த வாளையார் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சத்து 5 ஆயிரம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். கேரள- தமிழக எல்லையான கோவை அடுத்த வாளையார் பகுதியில் சுங்கவரித்துறை டோல்கேட் உள்ளது. இதன் அருகே வாளையார் காவல்நிலைய போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்த வாலிபர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது காரை சோதனை செய்தனர். இதில், சீட்டிற்கு அடியில் ரூ.42 லட்சத்து 5 ஆயிரம் ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த பிரவீன் (35) என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பணம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாளையார் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காரில் கடத்திய ரூ42 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article