சென்னை: பெரியார் மண்ணில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம் என்று கூறினார்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.