விருதுநகர், பிப்.12: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் சத்திரரெட்டியாபட்டி கிராமத்தில் நடைபெற்றது. முகாம் நிறைவு விழாவில் கல்லூரி செயலாளர் தர்மராஜன் சிறப்புரையாற்றி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் கல்லூரி முதல்வர் செந்தில், பள்ளி தலைமையாசிரியர் முருகன் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் இணைந்து அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
The post காமராஜ் பொறியியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.