தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தான் பட்டியல் சமூகத்தின் 7 உட்பிரிவு களை ஒருங்கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்தது.
இதன் தொடர்ச்சியாக மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றார். இதைவைத்து தேவேந்திர குல மக்களை பாஜக-வை நோக்கித் திருப்பும் வேலைகளை சிலர் முன்னெடுத்தனர்.