காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர் பணிநியமனம் குறித்து ஆலோசனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

3 months ago 9

தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கான பணிநியமனம் தொடர்பான அதிகாரிகள் அளவிலான கூட்டம் நாளை (நவ.28) நடைபெறவுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான அருள்ஜோதி உட்பட 83 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: அரசு கால்நடை மருத்துவமனைகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உதவி கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனம் மேற்கொள்ளவில்லை. இதனால் காலிப்பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

Read Entire Article