கந்தர்வகோட்டை, மார்ச் 27: காட்டுநாவல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் சாலையில் ஆபத்தான நிலையிலுல்ள தெருவிளக்குகளுக்கான மின் ஸ்விட்டை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் சாலையில் தெருவிளக்குகளை இயக்கும் மின் சுவிட்ச் உள்ளது. இதன் மூலம் தினசரி தெருவிளக்குகளை இயக்கிவருகின்றனர். இந்த சுவிட்ச் பெட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் சிறுவர்கள் கைக்கு எட்டும் நிலையில் உள்ளது. மேலும், சாலையோரத்தில் இருப்பாதல் ஏதேனும் விபத்து ஏற்பாடும் முன் சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சுவிட்ச் பெட்டியை பாதுகாப்பான முறையில் முடி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காட்டுநாவல் சாலையில் ஆபத்தான நிலையில் மின் இயக்கி appeared first on Dinakaran.