காசி தமிழ் சங்கமம்: வேற்றுமையில் ஒற்றுமையின் கொண்டாட்டம்

3 months ago 10

​காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்​கு​கிறது. இந்தியா​வின் வேற்றுமை​யில் ஒற்றுமை என்ப​தற்கு மேலும் ஒரு சான்று. இன்று முதல் பிப். 24 வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார விழா, நாட்​டின் மிகத் தொன்​மையான ஆன்மிக வளம் கொண்ட காசி​யை​யும், தமிழகத்​தை​யும் ஒன்றிணைக்​கிறது. நிலப்பரப்​பைக் கடந்து ஆழ்ந்த நாகரீகப் பிணைப்பை வளர்க்​கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி​யால் தொடங்கி வைக்​கப்​பட்ட காசி தமிழ்சங்கமம் இந்த ஆண்டு 3-வதுகலாச்சார நிகழ்வாக நடைபெறுகிறது. சுதந்​திரத்​தின் அமிர்தப் பெரு​விழா​வின் ஒரு பகுதியாக மத்திய அரசால் தொடங்​கப்​பட்ட இது, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்​வைக் கொண்​டுள்​ளது. காசி தமிழ் சங்கமம் 3.0 தமிழகத்​தின் உயிரோட்​டமான வளமான பாரம்​பரி​யம், வாராணசி​யின் காலத்​தால் அழியாத மரபுகள் ஆகிய​வற்றை வலுப்​படுத்து​கிறது.

Read Entire Article