காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மேலும் ஒரு சான்று. இன்று முதல் பிப். 24 வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார விழா, நாட்டின் மிகத் தொன்மையான ஆன்மிக வளம் கொண்ட காசியையும், தமிழகத்தையும் ஒன்றிணைக்கிறது. நிலப்பரப்பைக் கடந்து ஆழ்ந்த நாகரீகப் பிணைப்பை வளர்க்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ்சங்கமம் இந்த ஆண்டு 3-வதுகலாச்சார நிகழ்வாக நடைபெறுகிறது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய அரசால் தொடங்கப்பட்ட இது, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்வைக் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் 3.0 தமிழகத்தின் உயிரோட்டமான வளமான பாரம்பரியம், வாராணசியின் காலத்தால் அழியாத மரபுகள் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.