கள் இறக்கியதாக விவசாயி மீது வழக்கு

3 days ago 3

 

காங்கயம், மார்ச்29: ஊதியூர் அருகே சமத்துவபுரம், காசிலிங்காம்பாளையம், அப்பியாம்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதியில் கள் இறங்குவதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது எல்லப்பாளையம் புதூர் கிராமத்தில் உள்ள ஒரு தென்னத் தோப்பில் கள் இறக்கியது தெரியவந்தது.

தொடர்ந்து தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் முட்டி கட்டி கள் இறக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கள் இறக்கியதாக அதன் உரிமையாளர் ராஜ்குமார்(37) என்ற விவசாயி மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து மொத்தம் 3 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கள் இறக்கிய முட்டிகளை உடைத்தும் அழிக்கப்பட்டது.

 

The post கள் இறக்கியதாக விவசாயி மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article