கல்விக்கு வயது தடையில்லை... 70 வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற முதியவர்

7 hours ago 1

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கோவிலாம்பூண்டியை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 70) 1967ல் 6 ம்வகுப்பு படிக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். கிராம இளைஞர்களுக்கு கல்வியின் பயனை உணர்த்தும் பொருட்டு நேரடித்தேர்வு முறையில் 2022 ம் ஆண்டில் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

பின்னர் 2024 ம் ஆண்டு நேரடி தேர்வு முறையில்10 ம் வகுப்பு எழுதினார். 3-வது முயற்சியாக 10ம் வகுப்பு தேர்வெழுதிய அவர், நடப்பாண்டில் தேர்வு எழுதி முழுமையாக 299 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து 10ம் வகுப்பு தேர்வெழுதி முதியவர் தேர்ச்சி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி வருகிறது.  

Read Entire Article